நிதித் துறையின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பணிப்பாளர் சபை அங்கீகாரம்!

Friday, November 10th, 2023

நாட்டின் நிதித் துறையின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்கு, வலுவான நிதி பாதுகாப்பு வலையமைப்பு தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வங்கியின் மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடட் ஸெர்வோஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம், வணிகங்கள், தனிநபர்கள், சிறு வணிகங்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு நம்பகமான மற்றும் நிலையான வங்கித்துறை அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: