நாளை யாழ் .போதனா வைத்தியசாலை தாதியர்கள் சேவைப் புறக்கணிப்பு!
Tuesday, November 21st, 2017யாழ்ப்பாணம் போதனா மருத்துவனை உட்பட வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் மருத்துவனைகளில் சேவையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் நாளை காலை 7 மணி முதல் 24 மணி நேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பலதரப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் அரச தாதியர்கள், துணைமருத்துவ சேவையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இது முன்னெடுக்கப்படுகின்றது என்று வடக்கு மாகாண அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் க.ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்.
மேலும் நோயாளர்களினதும் பொதுமக்களினதும் நன்மை கருதி உயிர்காப்பு நடவடிக்கைகளுக்கான அவசர சிகிச்சைகளில் மட்டும் அவர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள முரண்பாடு, பதவியுயர்வு , மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை, கைவிரல் அடையாள வருகை பதிவேட்டை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட தீர்மானத்தை நிறுத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
Related posts:
|
|