குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு மீளவும் தொற்று அறிகுறி – பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Friday, May 15th, 2020

யாழ்ப்பாணத்தில் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் தாக்கம் சிறிதளவில் காணப்படுவதால் தொடர்ந்தும் தனிமைப்படுத்தி மீளவும் பரிசோதனை செயப்பட உள்ளதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 27 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதில் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவர்கள் அனைவரும் அரியாலை பகுதியை சேர்ந்தவர்கள். கடந்த மாதம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று இரண்டு கிழமைக்கு முன்னர் வீடு திரும்பியவர்கள்.

இன்றைய  பரிசோதனையில் இவர்களில் ஐவருக்கு வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் சிறிதளவில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இவர்கள் ஐவரும் தொடர்ந்தும் இரண்டு கிழமை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலிலில் இருக்கவேண்டும். அத்துடன் இரண்டு கிழமையின் பின்னர் மீண்டும் PCR பரிசோதனை  மேற்கொள்ளப்பட வேண்டும் என நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள் அறிய தந்துள்ளனர்.

இதேவேளை சண்டிலிப்ப் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு சண்டிலிப்பாய் பிரிவில் ஒருவருக்கு மீள் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதே போல போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: