நாளை யாழ். குடாநாட்டின் சில இடங்களில் மின் தடை !

Friday, June 3rd, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களின் சில பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென மின்சார இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை சனிக்கிழமை(03-6-2016) காலை- 8.30 மணி முதல் பிற்பகல்-5.30 மணி வரை மயிலங்காடு, குப்பிளான், மந்திகை, மந்திகை வைத்தியசாலை, காந்தியூர், இலகடி மாலுசந்தி, அல்வாய், நாவலடி, ஸ்ரீலங்கா பாடசாலை, வியாபாரி மூலை, இன்பருட்டி, இன்பருட்டிப் பிள்ளையார் கோவிலடி, சுப்பர்மடம், பருத்தித் துறை அரசினர் வைத்தியசாலை, சுப்பர்மடம் மரைன் வெல்த் ஐஸ் தொழிற்சாலை, கோப்பாய்ச் சந்தி ஆகிய இடங்களிலும், கிளிநொச்சியின் சில பிரதேசங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருகுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: