நாளை பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, August 25th, 2024

நாளை திங்கட்கிழமை பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இவ்வாறு மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளன.

இரண்டாம் பாடசாலை தவணை கடந்த வெள்ளிக்கிழமை 16 ஆம் திகதி முடிவடைந்ததுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

000

Related posts: