நாளை தைப்பொங்கல் – பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் மும்முரம்!

Saturday, January 14th, 2023

தைப்பொங்கல் பண்டிகை இந்துக்களால் நாளை (15) கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் சந்தைகளில் குறிப்பாக திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்காக பொதுமக்கள் தைப்பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் தைப்பொங்கல் வியாபாரங்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: