இந்திய பிரதமர் மோடியை சந்திக்கும் ஜனாதிபதி!
Tuesday, May 10th, 2016இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் சனிக்கிழமை இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
எதிர்வரும் சனிக்கிழமை புதுடில்லியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்குமிடையிலான இரு தரப்பு சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்துள்ள மத விழாவொன்றில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் மோடி விடுத்துள்ள அழைப்பினை ஏற்று ஜனாதிபதி புதுடில்லி பயணமாகிறார்.
நாளை செவ்வாய்க்கிழமை பிரிட்டன் பயணமாகவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கிருந்தவாறு இந்தியாவின் புதுடில்லிக்கு பயணம் செய்யவுள்ளார். லண்டனில் நடைபெறவுள்ள சர்வதேச ஊழல் தடுப்பு மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் ஜனாதிபதிக்கு விடுத்த அழைப்பினை ஏற்று ஜனாதிபதி பிரிட்டன் செல்கிறார்.
அந்தவகையில் வௌ்ளிக்கிழமை லண்டனிலிருந்து புதுடில்லி பயணமாகவுள்ள ஜனாதிபதி அஙகு இந்தியப் பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதுடன் இதன்போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
குறிப்பாக இலங்கையில் முன்னெடுக்கப்படும் புதிய அரசியலமைப்பு மற்றும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின்போது பேச்சுவார்த்தை நடத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது
Related posts:
|
|