நாளாந்தம் கொரோனா தரவுகளில் முரண்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, August 19th, 2021

நாளாந்தம் கொரோனா இறப்புகள் மற்றும் தொற்றாளர்கள் தொடர்பான தொற்றுநோயியல் பிரிவினால் வெளியிடப்பட்ட தரவுகளில் சில முரண்பாடுகளை கண்டறிந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்.அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டம், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் தொடர்பான எண்ணிக்கையில் வெளியிடப்பட்ட பிரச்சினைகளை அடையாளம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிராந்திய அதிகாரிகளால் அனுப்பப்பட்ட தரவை தொற்றுநோயியல் பிரிவு சரிபார்க்க முடியாததால் முரண்பாடு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தரவைச் சரிபார்த்த பிறகு, கடந்த சில நாட்களில் கம்பஹா மாவட்டம் தொடர்பான கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த அதிகாரிகள் அந்தந்த மாகாணங்களில் பதிவான இறப்புகள் மற்றும் தொற்றாளர்களை குறைவாகக் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எல்லா தரவையும் சரிபார்த்த பின்னர் , அவர்கள் அறிக்கைகளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: