5 விநாடிகள் முகக்கவசமின்றி இருப்பது ஆபத்து – மருத்துவர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை!

Friday, August 13th, 2021

5 விநாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக மருத்துவர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர எச்சரித்துள்ளார்.

அத்துடன் டெல்டா கொரோனா தொற்றின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தீவிரமடையும் எனவும் அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

அதேநேரம் மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும். குறிப்பாக அடுத்த இரண்டு, மூன்று வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவை.

5 விநாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: