26 ஆம் திகதி வவுனியாவிற்கு 80 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் – சுகாதார அமைச்சர் உறுதியளித்ததாக ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Wednesday, July 21st, 2021

வவுனியா மாவட்டத்திற்கு எதிர்வரும் வாரம் 80 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என சுகாதார அமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் நேற்றையதினம் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது வவுனியா மாவட்டத்திற்கு 1000 தடுப்பூசிகள் தான் இதுவரை வழங்கப்பட்டுள்ளது, வடமாகாணத்தில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட மாவட்டமான வவுனியாவிற்கு அதிக எண்ணிக்கையில் கொரோனா தடுப்பூசிகளை பொற்றுத் தாருங்கள் என்று கோரியிருந்தேன்.

இதற்கு சுகாதார அமைச்சர் பவித்திராதேவி வன்னியராச்சி எதிர்வரும் 26 ஆம் திகதி நாட்டுக்கு வர இருக்கின்ற தடுப்பூசிகளில் 80 ஆயிரம் தடுப்பூசிகளை வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கி தருவதாக உறுதியளித்துள்ளார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: