நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கப்படுமானால் விலைகுறைப்பை பயணிகளுக்கு வழங்க தயார் – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
Monday, July 18th, 2022தனியார் பேருந்துகளுக்கு நாளாந்தம் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்படுமானால், விலைகுறைப்புக்கு ஏற்ற பயனை பயணிகளுக்கு வழங்க தயாராகவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வலுசக்தி அமைச்சர் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
தற்போது, இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து டிப்போ ஊடாக தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது.
எனினும், அந்த எரிபொருள் போதுமானதாக இல்லை என இலங்கை பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
வடக்கில் முடக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் மேலும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!
ஐக்கிய இராச்சியத்தால் இலங்கையில் புதிய வர்த்தகத் திட்டம் முன்னெடுப்பு - கொழும்பில் உள்ள பிரித்தானிய ...
பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பாக வெளியானது வர்த்தமானி!
|
|