எதிர்வரும் 20ம் திகதி அரசமுகாமைத்துவ பதவி III க்கான போட்டிப்பரீட்சை !

Tuesday, May 16th, 2017

அரச முகாமைத்து பதவி III க்கான போட்டிப் பரீட்சை  2012 (1) – 2016(2017) பரீட்சை எதிர்வரும் 20 ம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இந்த பரீட்சை எழுதுவதற்கு 8877 பேர் தகுதிபெற்றுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 64 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.
அனைத்;து பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சைக்கான அனுமதிஅட்டை தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அனுமதி அட்டை தொடர்பில் ஏதேனும் விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமாயின் கீழ்க்கண்ட பரீட்சை திணைக்களத்தின் பிரிவுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்முடியும். தொலைபேசி இலக்கம் 011 2785230 / 011 2177075 / 1911 என்ன அவசர தொலைபேசியினூடாக 24 மணித்தியால சேவையினூடாகவும் விபரங்களை அறிந்துகொள்ளமுடியும்.

Related posts: