எதிர்வரும் 20ம் திகதி அரசமுகாமைத்துவ பதவி III க்கான போட்டிப்பரீட்சை !
Tuesday, May 16th, 2017அரச முகாமைத்து பதவி III க்கான போட்டிப் பரீட்சை 2012 (1) – 2016(2017) பரீட்சை எதிர்வரும் 20 ம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்த பரீட்சை எழுதுவதற்கு 8877 பேர் தகுதிபெற்றுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 64 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.
அனைத்;து பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சைக்கான அனுமதிஅட்டை தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அனுமதி அட்டை தொடர்பில் ஏதேனும் விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமாயின் கீழ்க்கண்ட பரீட்சை திணைக்களத்தின் பிரிவுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்முடியும். தொலைபேசி இலக்கம் 011 2785230 / 011 2177075 / 1911 என்ன அவசர தொலைபேசியினூடாக 24 மணித்தியால சேவையினூடாகவும் விபரங்களை அறிந்துகொள்ளமுடியும்.
Related posts:
விசாரணைகளை விரிவுபடுத்தாது மறியலை நீடிப்பது சரியானதன்று - பொலிஸாருக்கு கடுந்தொனியில் நீதிவான் எச்சர...
இன்று(01) முதல் கடும் மழையுடன் கூடிய காலநிலை - வளிமண்டலவியல் திணைக்களம்!
அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை அரச அதிகாரிகள் உரியவாறு புரிந்துக்கொள்...
|
|