நான்கு நிறுவனங்களை மறுசீரமைக்க ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, July 13th, 2023

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், லிட்ரோ எரிவாயு நிறுவனம் உள்ளிட்ட 4 நிறுவனங்களை மறுசீரமைப்புக்கு உட்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, குறித்த பணிகளுக்காக சர்வதேச போட்டிக் கொள்முதல் முறைமையைப் பின்பற்றி, பரிவர்த்தனை ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, அக்கறை வெளிப்பாட்டு கூற்று மற்றும் முன்மொழிவுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகை குழுவால் குறுகிய பட்டியல்படுத்தப்பட்ட முன்மொழிவுகளில் தரப்பண்பு மற்றும் செலவுகளின் அடிப்படையிலான தெரிவு பொறிமுறையை பின்பற்றி குறித்த நான்கு நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை ஆலோசகர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, தெரிவு செய்யப்பட்ட பரிவர்த்தனை ஆலோசகர்களுடன் தொடர்புடைய உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: