நான்கு துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு – அதிவிசேட வர்த்தமானியும் வெளியானது!
Tuesday, April 18th, 2023
மின்சார விநியோகம், பெட்ரோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், தபால் சேவை மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் E.M.S.P.ஏக்கநாயகவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மக்களின் பொதுவாழ்க்கையை பேணுவதற்கு உரிய நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகள் இன்றியமையாதவை என்பதால் அந்த சேவைகளில் தடையோ அல்லது இடையூறுகளோ ஏற்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டே அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இணையத்தள வர்த்தகம் தொடர்பில் புதிய சட்டங்கள்!
மேலும் இரு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்துங்கள் - ஜனாதிபதியிடம் இலங்கை வைத்திய அதிகாரிக...
இலங்கையில் கொவிற் தொற்றாளர் எண்ணிக்கையுடன் உயிரிழப்புகளும் தொடர்கிறது!
|
|
|


