நான்கு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம யாழ்ப்பாணம் வருகை!

Monday, July 15th, 2024

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கும் நான்கு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்றையதினம் (15) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்

யாழ்ப்பாணத்தில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெறும் மூன்று மாவட்டங்களுக்கான கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் இரு திட்டங்களும், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒரு திட்டமும் முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியில் 980 ஏக்கர் நிலப் பரப்பில் ஒரு திட்டம் குறித்தும், கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பகுதியில் 170 ஏக்கர் நிலப் பரப்பில் மற்றொரு திட்டம் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  காங்கேசன்துறை கடற்கரைப் பூங்கா மற்றும் காங்கேசன்துறை விசேட முதலீட்டு வலயம் என்பன தொடர்பில் ஆராயப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: