நாணயத்தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – மத்தியவங்கி!
Tuesday, January 17th, 2017
தற்போது புழக்கத்திலுள்ள நாணயத்தாள்களை சிறந்த முறையில் பேணுவதற்காக நாட்டில் பயன்பாட்டிலுள்ள நாணயத்தாள்களை சேதப்படுத்தி மாற்றங்களை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
இதற்கென இந்தாண்டு பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நாணய குற்றிகளை வெளியிடுதல் தொடர்பில் முறையாக மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தாண்டில் புதிய நாணய குற்றிகளை வெளியிடவும் மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
வாக்காளர் பதிவேட்டில் திருத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்!
மேலும் 12 மாவட்ட மக்களுக்கு இன்றுமுதல் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பம் - இராஜாங்க அமைச்சர், பேராசிரிய...
ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டும் சாரதிகளுக்கு அபராதப் பத்திரம் இல்லை!
|
|
|


