நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Monday, August 21st, 2023

நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்குத் திரும்பாத வைத்திய நிபுணர்களே இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

2022ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதிமுதல் இந்த வருடத்தின் ஒகஸ்ட் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 363 வைத்தியர்கள் வெளிநாட்டுப் பயிற்சிக்காகச் சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில், 120 மருத்துவர்கள் மீண்டும் நாடு திரும்பவில்லை என குறிப்பிடப்படுகின்றது. நாட்டின் 29 மயக்கவியல் நிபுணர்களில் 12 பேரும் நாடு திரும்பவில்லை.

கறுப்புப் பட்டியலில் உள்ள மருத்துவர்கள் நாடு திரும்ப முடியும் என்ற போதிலும் அவர்கள் சேவையில் ஈடுபடுவதானால், பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை: நீதவான் நலன்புரி நிலையத்தில் வாழ்ந்த 70 குடும்பங்களுக்கு ...
சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு இரத்த பரிசோதனை இல்லை - போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் அறிவிப்ப...
குற்றவியல் மற்றும் சிவில் நடவடிக்கை சட்டக்கோவை திருத்த சட்டமூலங்களுக்கு நாடாளுமன்ற குழு அனுமதி!