7 நாட்களில் எரிபொருள் விற்பனை அதிகரிப்பு – பண்டிகை காலங்களில் கூடுதல் விநியோகம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, April 13th, 2023

கடந்த 7 நாட்களின் தரவுகளுக்கமைய, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர QR அமைப்பின் மூலம் எரிபொருள் விற்பனை மற்றும் சாதாரண எரிபொருள் விற்பனையில் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைக் காட்டுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் 60% க்கும் குறைவாக இருந்த விற்பனை தற்போது 80% க்கு மேல் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர QR வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத 66 எரிபொருள் நிலையங்களை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதையடுத்து, இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் விநியோகிக்கப்படும் நாளொன்றுக்கான எரிபொருளின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, நாளொன்றில் விநியோகிக்கப்படும் 92 ஒக்டேன் பெற்றோலின் அளவை 4,650 மெட்ரிக் தொன்னாகவும், ஒட்டோ டீசலின் அளவை 5,500 மெட்ரிக் தொன்னாகவும் அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: