நாட்டு மக்களுக்காக பிரதமர் இன்று விசேட உரை!

Monday, May 16th, 2022

 

அரசியலமைப்பின் 21 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றையதினம் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும், ஆசிய அபிவிருத்தி வங்கிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், நேற்று அவர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இன்று கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்டார்.

அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கும், இந்த விடயம் தொடர்பான யோசனையை அமைச்சரவையில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான விசேட அறிவிப்பொன்றை நாட்டு மக்களுக்கு இன்றையதினம் வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

கடந்த 6 நாட்களில் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் 30 பேர் உயிரிழப்பு - பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹ...
22 ஆவது திருத்தச் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்துவதற்கு மக்களுக்கு தற்போது சந்தர்ப்பம் - அமைச்சர் கலா...
சிறிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான 25 நீதிமன்றங்களில் ஒன்று மாத்திரமே செயற்படுவதாக சுட்டிக்காட்டு!