நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Thursday, August 10th, 2023

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இந்த மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரத்து 303 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வாரந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து நான்காயிரத்து 608 பேரும் அமெரிக்காவில் இருந்து 4 ஆயிரத்து 254 சுற்றுலாப்பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சீனாவில் இருந்து 2 ஆயிரத்து 246 பேரும், பிரான்ஸில் இருந்து ஆயிரத்து 842 பேரும் ஜேர்மனியில் இருந்து ஆயிரத்து 791 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

000

Related posts: