நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் – பிரதமர்

Friday, November 3rd, 2017

நாட்டில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2017-2021ம் ஆண்டுகளுக்கான மனித உரிமை செயற்றிட்டத்தை வெளியிட்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் மனித உரிமைகள் தொடர்பான கரிசனைகள் இருந்தன. தற்போது புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சில ஊடகங்கள் அரசியல் நோக்கில் மனித உரிமைகள் தொடர்பான செய்திகளை வெளியிடுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: