நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!
Friday, August 18th, 2023இந்த நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“எமது நாடு ஜனநாயக நாடு. இங்கு இன, மத ரீதியில் வன்முறைகளைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. எந்த மதத்தினரும் எங்கும் சென்றும் சுதந்திரமாக வழிபட முடியும். அந்த வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது.
இன, மத ரீதியில் வன்முறைகளைத் தூண்டும் வகையில் சிலர் வெளியிடும் கருத்துக்கள் அண்மைய நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இப்படியான நிலைமைக்கு நாம் இடமளிக்க முடியாது. சட்டம் தன் கடமையைச் செய்யும். அதன் பிடியிலிருந்து எவரும் தப்ப முடியாது.” – என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்தப்படமாட்டாது - அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி!
அவுஸ்திரேலியா - இலங்கை கிரிக்கெட் தொடர் அனுமதிச்சீட்டு வருமானத்தை மக்களுக்காக செலவிட தீர்மானம்!
புதிய ஆண்டுமுதல் கல்வி முறையில் புதிய முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் - கல்வி அமைச்சர் சுசில் பி...
|
|