நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் இருபத்தைந்து வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் – சுகாதார அமைச்சு அதிர்ச்சி தகவல்!

Sunday, June 11th, 2023

நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் இருபத்தைந்து சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கும் வகையில், பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டதுடன், இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.

நாளையதினம் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 42,184 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் 61 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் டெங்கு அபாயப் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


மக்கள் ஆணையை தேர்தல் ஆணைக்குழு வெற்றிபெறச் செய்யவேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் கடலில் மூழ்கி வருகிறது - எண்ணெய் கசிந்தால் கடலுக்கு ஆபத்து என இலங்கை கடற்சூ...
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்பாடு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் எட்டப்படும் – கோட்டாபய ராஜபக்ச ...