நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: நால்வர் மரணம் – 41 பிரதேச செயலக பிரிவுகளில் 5 ஆயிரத்து 790 போர் பாதிப்பு என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பு!

Tuesday, November 2nd, 2021

சீரற்ற கால நிலை காரணமாக நாட்டின் 10 மாவட்டங்களில் 41 பிரதேச செயலகங்க பிரிவுகளில் பாதிப்பு இடம்பெற்றுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஆயிரத்து 444 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 790 பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் அதன் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதத்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இந்த அனர்த்தத்தினால் 4 உயிரிழப்புக்ளும்  இடம்பெற்றுள்ளன. வெள்ளத்தில் சிக்கி 2 பேரும், மின்னல் தாக்கலுக்குள்ளாகி 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இதன் போது 03 வீடுகள் முழுமையாகவும், 409 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மேஜர் ஜெனரல் சுதத்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் சில தினங்களில் காலநிலையில் சிறிதளவு மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: