நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை இந்த மாத இறுதி வரையில் நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Monday, May 4th, 2020

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கடுமையான வெப்பநிலையுடன் கூடிய வானிலை இந்த மாத இறுதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் மே மாத முடிவில் பருவப் பெயர்ச்சி நிலை உருவாகும் எனவும் அதுவரையில் இந்த அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை நீடிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆய்வாளர் ஷானிகா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று மேல், மத்திய, சபரகமுவ, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறியுள்ளார். சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசக் கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வந்ததையே திருப்பி அனுப்பிய சாதனை மாகாண சபைக்கு உரியது - வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன்!
உள்ளூராட்சித் திணைக்கள முன்பள்ளிகளில் தற்காலிகமாக பணியாற்றிய ஆசிரியர் பலர் நிரந்தர நியமனத்தை இழந்தனர...
சுயநலன்களுக்காக மக்களை ஏமாற்றுவதற்கு நாம் தயாரில்லை - யாழ் .மாநகர சபையின் பாதீட்டை தோற்கடிக்க இதுவ...