நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை இந்த மாத இறுதி வரையில் நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
Monday, May 4th, 2020
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கடுமையான வெப்பநிலையுடன் கூடிய வானிலை இந்த மாத இறுதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் மே மாத முடிவில் பருவப் பெயர்ச்சி நிலை உருவாகும் எனவும் அதுவரையில் இந்த அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை நீடிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆய்வாளர் ஷானிகா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று மேல், மத்திய, சபரகமுவ, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறியுள்ளார். சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசக் கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய தூதுவராலயங்களைத் திறக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!
ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு - மிக விரைவில் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அ...
இலங்கையில் மீண்டும் முதலீடு செய்யுங்கள் - ஜப்பானிடம் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க கோரிக்கை!
|
|
|


