நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை அமுலாக்கம் – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, March 16th, 2022

இன்றையதினமும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, A B C D E F G H I J K L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணி நேரம் தடைப்படும்.

அத்தோடு மாலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள், 2 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

P Q R S T U V W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், காலை 8.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதிக்குள் 3 மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மாலை 5.30முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 08.30 க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ள நிலையில் இரவு 8 மணி முதல் 09.30 மணி வரை நாட்டின் எந்தப் பகுதிக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது.

இரவு 8 மணிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் மின்சாரம் இருக்கும் என்றும் இரவு 9.30 மணிக்கு பின்னர் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: