நாட்டில் சடுதியாக அதிகரித்து செல்லும் கொரோனா தொற்று – கடந்த 24 மணிநேரத்தில் 800 பேருக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Wednesday, December 9th, 2020

நாட்டில் மேலும் 797 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 567 பேர் பேலியகொட மீன் சந்தைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய 230 பேரும் சிறைச்சாலைக் கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 454 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 21 ஆயிரத்து 258 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஏழாயிரத்து 978 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதேவேளை, கொரோனா தொற்றினால் இதுவரை 142 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: