நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு!

Tuesday, June 29th, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் ஆயிரத்து 850 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 40 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை, 2 இலட்சத்து 55 ஆயிரத்து 508 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொவிட் சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 315 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 2 ஆயிரத்து 251 பேர் குணமடைந்ததாக தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்யடையில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 21 ஆயிரத்து 249 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 41 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று மாலை வெளியிட்டார்.

குறித்த உயிரிழப்புகளில் 24 ஆண்களும், 17 பெண்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 985 ஆக அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: