நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிப்பு!
Wednesday, March 6th, 2024நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (புதன்கிழமை) கொழும்பின் காற்று மாசு 127 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலை உணர்திறன் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், காலி கராப்பிட்டியில் 90 ஆகவும், புத்தளத்தில் 88 ஆகவும், குருநாகல் மற்றும் அனுராதபுரத்தில் 86 ஆகவும் காற்று மாசு சுட்டெண் பதிவாகியுள்ளது.
அத்துடன் நாட்டின் காற்று மாசுக் குறியீடு 50 யை கடந்துள்ளமையினால் மக்களுக்கு அதிக ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வருகிறது இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் ஒழுக்க விதிகள்!
வளிமண்டல குழப்ப நிலை உருவாகும் சாத்தியம் - நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்ப...
வைத்தியசாலைகளின் மின்கட்டண நிலுவை தொடர்பில் மின்சார சபையுடன் இணக்கம் - சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்பு...
|
|