அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இன்று முதல் பொலிஸ் சோதனை – பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Monday, May 18th, 2020

நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார பாதுகாப்புமுறை கடைபிடிக்கப்படுகின்றதா என்ற சோதனை இன்றுமுதல் முன்னெடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நிறுவனங்களை சோதனையிட வருபவர்களுக்கு உதவுமாறும் அவர் நிறுவனங்களின் பிரதானிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே திறக்கப்பட்டுள்ள ஆடை தொழிற்சாலைகளை சோதனையிடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: