நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Wednesday, January 18th, 2023

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், QR முறைமையை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலை அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, எரிபொருள் முன்பதிவு மற்றும் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


புதிய பத்திக் பயிற்சி நிலையத்தின் ஊடாக நவீன தேசிய ஆடைகள் மற்றும் நவீன பத்திக் கலை உருவாக முடியும் - ...
அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய அரசாங்கத்தினால் முடியும் -...
நாடு முழுவதும் 359 சித்தமருத்துவ மாணவர்கள் உள்ளக பயிற்சிக்காக காத்திருப்பு - சித்த மருத்துவ மாணவக...