மத்தள விமான நிலையத்தை மறுசீரமைக்க நடவடிக்கை – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022

மத்தள விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு தயாராகவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மத்தள விமான நிலையத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

காட்டு யானைகளின் பிரவேசத்தை தடுப்பதற்காக பாதுகாப்பு வேலிகளை அமைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: