நாட்டில் இதுவரை 27 இலட்சத்து 74 ஆயிரத்து 683 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, June 13th, 2021

நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது

இதேவேளை நாட்டில் இதுவரை 27 இலட்சத்து 74 ஆயிரத்து 683 கொவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில் கொவிஷீல்ட் தடுப்பு மருந்தின் முதலாவது தடுப்பூசி 9 இலட்சத்து இருபத்து ஐயாயிரத்து 242 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது இதன் இரண்டாவது தடுப்பூசி 3 இலட்சத்து 55 ஆயிரத்து 358 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

சைனோ ஃபார்ம் தடுப்பு மருந்தின் முதலாவது தடுப்பூசி 12 இலட்சத்து 69 ஆயிரத்து 157 பேருக்கும் அதன் இரண்டாவது தடுப்பூசி ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 640 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தின் முதலாவது தடுப்பூசி 64 ஆயிரத்து 986 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீன நாட்டவர்களுக்கு 5300 சைனோ பார்ம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: