நாட்டின் 55 வீதத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Thursday, October 7th, 2021

இலங்கையின் சனத்தொகையில் தடுப்பூசி ஏற்ற தகுதியானவர்களில் 55% க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியின் முதல் டோஷை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சில மாவட்டங்களில் முதல் டோஸ் 80% க்கும் அதிகமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே 82% க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகமான வைத்தியர். ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாத்தளை மாவட்டத்தில் 72% ஆனவர்களும் மன்னார் மாவட்டத்தில் 67% ஆனவர்களும் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே குறைந்தளவு மக்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அங்கு 28 வீதமானவர்களே தடுப்பூசிகளை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அக்டோபர் 16-க்குப் பின்னர் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அந்த நேரத்தில் நிலைமையை ஆராய்ந்த பின்னர் இது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: