நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு சகல அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும் – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்ரஜித் குமாரசுவாமி தெரிவிப்பு!

Sunday, June 5th, 2022

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சகல அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்ரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் செயற்பட்ட அரசாங்கங்களும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் இருந்தே இதனை கட்டுப்படுத்துவதற்காக செயற்பட்டிருக்க வேண்டும் எனவும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்ரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: