நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க அரசியல் பேதங்களைக் கடந்து செயற்படத் தயார் – புதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு!

Friday, July 22nd, 2022

நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க அரசியல் பேதங்களைக் கடந்து செயற்படத் தயார் என புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரதமராக பதவியேற்றத்தைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாம் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பது, இதற்கு முன்னர் நாம் சந்தித்திராத ஒன்றாகும். அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறோம்.

இன்று நாம் அமைச்சரவையை நியமித்த பின்னர், நாம் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளோம்.

எமது பயணத்தை மீண்டும் சக்திமிக்கதாக மாற்ற நாம் நடவடிக்கை எடுப்போம். மக்களின் கோரிக்கைள் அனைத்தையும் கருத்திற்கொண்டே நாம் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் அரசமைப்பை விரைவில் மாற்றவுள்ளாக அறிவித்துள்ளார். இவை அத்தியாவசியமாகும். நாட்டில் எரிவாயு மற்றும் உரப் பிரச்சினை இருந்தது. இவற்றை நாம் நிவர்த்தி செய்துள்ளோம்.

அதேபோன்று, எரிபொருள் பிரச்சினை உள்ளது. இதனையும் விரைவில் நிவர்த்தி செய்வோம். எமக்கிடையில் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு, அரசியல் பேதமின்றி செயற்பட தயாராகவே உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

80 ஆயிரம் புதிய குழந்தைகள் பதிவு செய்யப்படவில்லை - குடும்ப சுகாதார பணியகம் தெரிவிப்பு!
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் – இராஜாங்க அம...
கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்றுமுதல் முன்னெடுப்...