கொரோனா வைரஸின் இரண்டாவது அலை – இலங்கையில் 27 நாட்களில் 60 பேர் பலி!

Friday, November 20th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் இதுவரை 15 ஆயிரத்து 330 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 60 பேர் பலியாகியுள்ளனர்.

மினுவாங்கொட கொத்தணிமூலம் ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இவ்வாறு 2 ஆவது அலைமூலம் கொரோனா தொற்றியவர்களில் நேற்றுவரை 9 ஆயிரத்து 200 இற்கும் மேற்பட்டோர்குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் இதுவரை மொத்தமாக 18 ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 12 ஆயிரத்து 903 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 4 பேர் நேற்று உயிரிழந்தனர். கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த இரு பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: