நாட்டின் அனைத்து மின்சார கட்டமைப்பையும் சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை!

Tuesday, April 5th, 2016

நாட்டின் அனைத்து மின்சார கட்டமைப்பையும் சோதனைக்கு உட்படுத்துவதற்கு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்பொருட்டு கனேடிய நிபுணர்கள் குழுவொன்றின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அண்மையில் ஏற்பட்டிருந்த மின்சாரத் தடை தற்போது முழுமையாக சீர்செய்யப்பட்டு வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் மின்சார துண்டிப்புகள் ஏற்படாதவாறு தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்..

Related posts: