யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 72 வீதமும் அரச உத்தியோகத்தர்களுக்கு 28 வீதமும் எரிபொருள் விநியோகம்!

Tuesday, July 5th, 2022

யாழ் மாவட்டத்தின் எரிபொருள் விநியோகம் தொடர்பில் அவசர கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

யாழ் மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தினர், இராணுவத்தினர், பொலிசார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.

இதன்போது நீண்ட நாள்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு எவ்வாறு எரிபொருட்களை விநியோகிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இனிவரும் காலங்களில் வரும் எரிபொருளை எவ்வாறு விநியோகிப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது பொதுமக்களுக்கு 72 விதமான எரிபொருள் விநியோகிப்பதாகவும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு 28 விதமான எரிபொருளை விநியோகிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அனைத்து அரச சேவையிலும் மாற்றம் மேற்கொள்ள தயாராகின்றார் ஜனாதிபதி - முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெ...
ஜனாதிபதி எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுசெல்ல வேண்டாம் - வாசுதேவ உள்ளிட்ட முன்னாள் அமைச்சர...
விவசாயத்தில் தன்னிறைவு காண இளைஞர்களை ஈர்க்கும் புதிய விவசாய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் -...