நாட்டின் அசாதாரண நிலைமைக்காக பதவிவிலகப் போவதில்லை – ஜனாதிபதி!
Tuesday, May 7th, 2019இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை பொறுப்பேற்று ஒருபோதும் தாம் பதவிவிலகப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கி நேர்காணலிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“தாக்குதலை தடுக்க முடியாமல் போனமையையிட்டு மிகவும் கவலையடைகின்றேன். ஆனாலும் குறித்த சம்பவங்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றோம்.
மேலும் இத்தகைய சம்பவங்கள் வேறு நாடுகளில் இடம்பெற்றபோது அந்நாட்டு தலைவர்கள் எவரும் அதற்கு பொறுப்பேற்று பதவிவிலகியதில்லை.
ஆகையால் தானும், இந்த தாக்குதல் சம்பவங்களை பொறுப்பேற்று பதவிவிலக போவதில்லை” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Related posts:
அனைத்து பாடசாலைகளினதும் இரண்டாம் வணைக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம் ஆரம்பம்!
ஜனாதிபதிக்கும் சுயாதீன நாடாளுமன்ற குழுவினருக்கும் இடையில் இன்று மீண்டும் சந்திப்பு!
கட்சித் தலைவர்களின் கருத்துக்களுடன், 21 ஆவது அரசியல் அமைப்புத்திருத்தம் அமைச்சரவையில் கலந்துரையாடப்ப...
|
|