நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு முறைமை தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு புதிய அறிவிப்பு!

Thursday, May 28th, 2020

நாடுமுழுவதும் எதிர்வரும் ஜுன் மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமை வரையும் அதன் பின்னரும் ஊரடங்கு சட்டம் அமுலாகும் முறைமை தொடர்பில் புதிய அறிக்கை ஒன்றை ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய மே மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஜுன் மாதம் முதலாம் திகதிமுதல் ஜுன் மாதம் 3 ஆம் திகதி புதன்கிழமைவரை நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் வழமை போன்று இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் ஜுன் மாதம் 4ஆம் திகதி மற்றும் 5ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜுன் மாதம் 6ஆம் திகதிமுதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மீள் அறிவிப்பு வரை வழமையான இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: