நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் புதிதாக வர்த்தமானி!
Wednesday, April 18th, 2018
நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடிவுறுத்தும் வகையில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நேரம் குறிப்பிடப்படாமையினால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நேரம் குறிப்பிட்டு புதிதாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நாடு திரும்பியதன் பின்னர் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவார் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்குட்படுத்த உத்தரவு!
கோண்டாவில் இந்து விளயாட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் பங்கேற்று சிறப்பிப்பு!
மாணவர்களுக்கு சுகாதார வசதிகளை செய்து கொடுங்கள் - இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
|
|
|


