நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இராஜினாமா!
Tuesday, July 6th, 2021ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தனது இராஜினாமா கடிதத்தினை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரது பதவி விலகல் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு வழிவகுக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜனவரியில் இரணைதீவுக்கான பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை!
கொரோனா உயிரிழப்பு உயர்வு – அமெரிக்கா - கனடா எல்லைகளுக்கு பூட்டு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இடையே விசேட சந்திப...
|
|