நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இராஜினாமா!

Tuesday, July 6th, 2021

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தனது இராஜினாமா கடிதத்தினை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரது பதவி விலகல் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு வழிவகுக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: