நாடாளுமன்ற அமர்வை நாளையதினம் மாத்திரம் நடத்துவதென கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

Monday, June 7th, 2021

இந்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வை நாளை (08) மாத்திரம் நடத்துவதென இன்றையதின் (07) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக. நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 4.30 வரை நாடாளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக இந்த வாரம் 8 ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகள் கூடவுள்தாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்திலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையால் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நாடாளுமன்றத்தை கூட்டாது 8 ஆம் திகதியன்று மாத்திரம் சபை அமர்வுகளை கூட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டது.

முன்பதாக நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கும் சபை அமர்வுகள் 9 ஆம், 10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டுவார காலத்திற்குள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சி மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்தும் நாடாளுமன்ற ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து நேற்றுவரையில் தொடர்ச்சியாக நாடாளுமன்ற காரியாலையம் மூடப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் காரியாலைய பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகளை தீர்மானிக்க கட்சி தலைவர்கள் கூட்டமும் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது.

இதன்போதே நாளைய நாளுக்கான அமர்வுகளை மாத்திரம் நடத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் ஊழியர்களை பணிகளுக்கு வரவழைக்க முடியாதமையே இதற்கான பிரதான காரணமாகவும் நாடாளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: