நாடாளுமன்றில் பெரும் அமளிதுமளிக்கு மத்தியில் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு சமர்ப்பிப்பு!

Tuesday, September 22nd, 2020

தற்போதைய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நீதியமைச்சர் அலி சப்றி, அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் நோக்கில் இந்த புதிய திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவுள்ளது.

இதன் பின்னர் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் மற்றும் குழு நிலை விவாதங்கள் நடைபெறவுள்ளன.

இந்த திருத்தச் சட்டத்திற்கான திருத்தங்கள் குழு நிலை விவாதத்தின் போது முன்வைக்கப்பட உள்ளன. இதனையடுத்து அந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

அதேவேளை 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பின்னர், அதற்கு எதிர்ப்பை வெளியிடும் பிரஜைகள் ஏழு நாட்களுக்கு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என நாடாளுமன்ற செயலாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவின் அரசியலமைப்பு ரீதியான செல்லுப்படி தன்மையை சவாலுக்கு உட்படுத்த முடியும். இதேவேளை 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ள நிலையில், கடும் வாத, பிரதிவாதகள்  இன்றையதினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: