நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு – 24 மணித்தியாலத்தில் 2 ஆயிரத்து 121 சந்தேகநபர்கள் கைது!

Monday, December 18th, 2023

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 24 மணித்தியாலத்தில்  2 ,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.

கைதான சந்தேகநபர்களில் 2 ஆயிரத்து 020 ஆண்களும் 101 பெண்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் 133 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: