இரு நாட்டு மக்களுக்கிடையே நெருங்கிய உறவுகளை பேணுவதே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் நோக்கம் – இந்திய பிரதமர் மோடியிடம் அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Thursday, October 21st, 2021

‘பௌத்த மதம் இந்தியாவிடம் இருந்து இலங்கை பெற்ற மிகப் பெரிய பரிசு என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் சுட்டிக்காட்டியிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தாம் இரு நாட்டு மக்களுக்கிடையில் எப்போதும் நெருங்கிய உறவைப் பேணி பாதுகாத்து வருவதாகவும் அதுவே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திழர மோடி- குஷிநகரில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை சந்திக்க கிடைத்தமை மகிழ்ச்சியான விடயமாகும் எனவும், பல்வேறு துறைகளின் ஊடாக இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உறவு வலுப்படுத்தப்பட்டு வருவதாகவும், அது இருநாட்டு மக்களுக்கு நன்மையளிக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்பதாக மஹாசங்கத்தினர் மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினருடனான ஸ்ரீலங்கன் விமானம் முதல் முறையாக தரையிறக்கப்பட்டதுடன், இந்தியாவின் குஷிநகர் விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமான சேவை நேற்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கிடையே 2020 செப்டம்பர் 20 ஆம் திகதி ஸும் தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற இருதரப்பு மாநாட்டின் பயனாக இந்த வரலாற்று பயணம் திட்டமிடப்பட்டது.

இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ள குஷிநகர் விமான நிலையமானது அந்நாட்டின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமாகும்.

பிரதமர் நரேந்திர மோடி  குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்ததுடன், அதனை தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் மஹாசங்கத்தினரை உள்ளடக்கிய ஸ்ரீலங்கன் விமானம் முதலாவதாக தரையிறங்கியமை வரலாற்று முக்கியத்துவமாகும்.

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர் உள்ளிட்ட நூறு மஹாசங்கத்தினர் இப்புனித பயணத்தில் இணைந்து கொண்டனர்.

இவ்வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இதன்போதே குறித்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

அத்துடன் இந்த சந்திப்பின்போது பகவத் கீதையின் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பெயர்ப்பிலான முதல் பிரதி அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் பாரதப் பிரதமர் நரேந்திர மோதியிடம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: