நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
Tuesday, January 9th, 2024நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
நாளொன்றில் சுமார் 300 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் 70 சுகாதார பிரிவுகளை உள்ளடக்கி நேற்று முன்தினம் முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில், டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகும் பகுதிகளில் நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக வொல்பெகியா என்ற பக்டீரியாவை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வரும் பெப்ரவரி முதல் ஊனமுற்ற முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம்!
இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்!
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் மீது பொலிஸ் நிலையத்தில் தாக்குதல் – மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப...
|
|