நவீன மருத்துவ உபகரணங்களையும் கொள்வனவில் நிதி மோசடி ? : ஜனாதிபதி!
Sunday, June 30th, 2019மருந்துப் பொருட்களையும், நவீன மருத்துவ உபகரணங்களையும் கொள்வனவு செய்யும்போது அதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கிலும் பெரும் நிதி மோசடிகள் இடம்பெறுவது மேலைத்தேய மருத்துவ துறையிலுள்ள பெரும் பிரச்சினையாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மன்னம்பிட்டி கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய வாட்டுத் தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி, “எமது ஆயுர்வேத மற்றும் சுதேச மருத்துவ முறைமையானது பெறுமதி வாய்ந்த ஒன்றாகும்.
மேலைத்தேய மருத்துவ விஞ்ஞானம் எவ்வளவு முன்னேற்றமடைந்தபோதும் எமது நாட்டின் சுதேச மருத்துவ முறைமையின் பெறுமதியை மிகைக்க முடியாதிருக்கின்றது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பிரதமரின் அறிவிப்பை வரவேற்கின்றேன்! டக்ளஸ் தேவானந்தா
யாருக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதை சுகாதார அமைச்சே தீர்மானிக்கும்!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் திருப்தி - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
|
|