விமானங்களை குத்தகைக்கு எடுப்பதில் பாகிஸ்தான் முனைப்பு!

Friday, July 22nd, 2016

இலங்கை விமானசேவைக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானங்களை குத்தகைக்கு பெற்றுக்கொள்வதில் பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் தேசிய விமான சேவை நிறுவனம் இவ்வாறு, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமனாங்களை குத்தகைக்கு எடுக்க உள்ளது. நான்கு விமானங்களை குத்தகைக்கு பெற்றுக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லண்டனுக்கான விமானப் பயணங்களுக்காக இந்த விமானங்கள் குத்தகைக்கு பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. A330 ரக விமானங்களே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கும் பாகிஸ்தான் தேசிய விமான சேவை நிறுவனத்திற்கும் இடையில் விமான குத்தகைக்கு எடுப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: